http://www.samaiyalarai.com
எளிய தமிழில்
இனிய சமையல்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
கறிவேப்பிலை சாதம் | காய்கறி சாதம் | காளான் பிரியாணி | குஸ்கா
தக்காளி சாதம் | தேங்காய் சாதம் | தேங்காய்ப்பால் புலாவ் | நெய் சாதம்
நெல்லிக்காய் சாதம் | பச்சைப்பயிறு சாதம் | பருப்பு சாதம் | புளி சாதம்
மாங்காய் சாதம்





பருப்பு சாதம்

தேவையான பொருட்கள்

அரிசி - 200 கிராம் (அ) 1 குவளை (டம்ளர்)
துவரம் பருப்பு - 50 கிராம் (அ) 1/4 குவளை (டம்ளர்)
தக்காளி - 3
பெரிய வெங்காயம் - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
வர மிளகாய் - 3
கறிவேப்பிலை - 1 கொத்து
பூண்டு - 10 பல்
கடுகு - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
உடைத்த உளுந்து - 1/4 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
நெய் - 3 தேக்க்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. அரிசியையும், துவரம் பருப்பையும் சேர்த்து தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

2. வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

3. தக்காளியையும் பூண்டையும் நறுக்கிக் கொள்ளவும்.

4. அடுப்பில் குக்கர் பாத்திரத்தை வைத்து 2 தேக்கரண்டி நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு வெடித்ததும், சீரகம், கடலைப்பருப்பு, உடைத்த உளுந்து, பெருங்காயம், இரண்டாக பிளந்த வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

5. பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

6. அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

7. அனைத்தும் நன்றாக வதங்கியவுடன், இதனுடன் நான்கு குவளை (டம்ளர்) தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

8. கொதி வந்ததும், ஊறவைத்து கழுவிய அரிசி மற்றும் துவரம் பருப்பை போட்டு குக்கரில் 4 அல்லது 5 விசில் வரும் வரை (குக்கரைப் பொறுத்து சாதம் குழைய விடாமல்) வேக வைத்து, அடுப்பிலிருந்து இறக்கவும்.

9. ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து 1 தேக்கரண்டி நெய் விட்டு சாதம் குழையாமல் கிளறி பரிமாறவும்.

குறிப்பு

1. உருளைக்கிழங்கு பொரியல் அல்லது உருளைக்கிழங்கு மசால், பருப்பு சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.


இணைய பக்க முகவரி: http://www.samaiyalarai.com/varietyrice/paruppurice.html



பயன்படு செய்திகள்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs