கறிவேப்பிலை சாதம் தேவையான பொருட்கள் பச்சரிசி - 1/2 கிலோ கடலைப்பருப்பு - 2 மேஜைக்கரண்டி முந்திரிப்பருப்பு - 10 அல்லது 15 மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து கடுகு - சிறிதளவு உளுத்தம்பருப்பு - சிறிதளவு நெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை 1. சிறிதளவு நெய்யில் கறிவேப்பிலையை வறுத்து, பொடித்துக் கொள்ளவும். 2. அரிசியை சாதமாக வடித்து உதிரி உதிரியாக ஒரு அகன்ற பாத்திரத்தில் வைக்கவும். 3. அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். 4. அதனுடன் பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். 5. அகன்ற பாத்திரத்தில் உள்ள சாதத்தில் கறிவேப்பிலைத்தூள், வறுத்த முந்திரி மற்றும் கடலைப்பருப்பு, மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி பரிமாறவும். குறிப்பு 1. விருப்பமுள்ளவர்கள் முந்திரி மற்றும் கடலைப்பருப்புடன் நிலக்கடலையும் சேர்க்கலாம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |