http://www.samaiyalarai.com
எளிய தமிழில்
இனிய சமையல்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
இட்லி | இட்லி உப்புமா | இடியாப்பம் | இடியாப்ப கிச்சடி | உப்புமா
கோதுமை தோசை | சப்பாத்தி | சேமியா கிச்சடி | பணியாரம் | பரோட்டா
பூரி | ரவா தோசை | வெண் பொங்கல்





வெண் பொங்கல்

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கோப்பை (250 கிராம்)
பாசிப் பருப்பு - 50 கிராம்
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
நெய் - 1 மேஜைக்கரண்டி
முந்திரி - 10
இஞ்சி - 1/2 இன்ச் அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
தண்ணீர் - 5 கோப்பை
உப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை

1. பச்சரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து கழுவி வடித்து வைத்துக் கொள்ளவும்.

2. பாசிப்பருப்பை எண்ணெய் விடாமல் வறுத்து கழுவிக் கொள்ளவும்.

3. அடுப்பில் குக்கரை வைத்து 5 கோப்பை தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

4. பிறகு பாசிப்பருப்பை போட்டு அரை வேக்காடு வேக விடவும்.

5. அதனுடன் கழுவி வைத்துள்ள அரிசியைப் போட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும்.

6. குக்கரில் 5 விசில் சத்தம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

7. தனியாக ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி நெய் விட்டு அதனுடன் உடைத்த முந்திரியை போட்டு வறுத்துக் கொள்ளவும்.

8. குக்கரில் ஆவி அடங்கியதும், வறுத்த முந்திரியை அதனுடன் சேர்க்கவும்.

9. அதனுடன் சிறிது நெய்யில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, துருவிய இஞ்சி ஆகியவற்றை தாளித்து சேர்க்கவும்.

10. பிறகு மீதமுள்ள நெய்யையும் ஊற்றி, கிளறி, சிறிது நேரம் மூடி வைக்கவும்.

11. பொங்கல் சிறிது ஆறியவுடன் பரிமாறவும்.

குறிப்பு

1. ஒரு பங்கு அரிசிக்கு நான்கு பங்கு தண்ணீரும், பாசிப்பருப்புக்கு ஒரு பங்குக்கு இரண்டு பங்கு தண்ணீரும் சேர்க்கவும்.

2. முழு மிளகு சாப்பிட விரும்பாதவர்கள் மிளகுத்தூளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.


இணைய பக்க முகவரி: http://www.samaiyalarai.com/tiffin/vennpongal.html



பயன்படு செய்திகள்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs