http://www.samaiyalarai.com
எளிய தமிழில்
இனிய சமையல்
     
செய்திகள்
சட்டப்பேரவையில் இருந்து விஜயகாந்த் 10 நாள் நீக்கம்  -  விஜயகாந்த் மீதான நடவடிக்கை சர்வாதிகாரமானது-ஸ்டாலின்  -  அதிமுக தனி பாணியால் தேமுதிக வெளியேற்றம்: கருணாநிதி  -  என்.கே.கே.பி.ராஜா உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை  -  தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும்: தா. பாண்டியன்  -  நெல்லை மோதல்: போராட்டக் குழுவைச் சேர்ந்த 25 பேர் மீதும் வழக்கு  -  கொடைக்கானல் பஸ் நிலையம் எதிரே வணிக வளாகத்தில் பயங்கர தீ  -  கடலூரில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு ஒத்திவைப்பு  -  திவாகரன் மனைவி ஹேமலதா காவல் நிலையத்தில் ஆஜர்  -  2ஜி - 122 உரிமத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்  -  மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு  -  மாயாவதியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை  -  ஈரானில் படித்த இந்திய மாணவர்கள் திடீர் வெளியேற்றம்  -  கால்பந்து போட்டியில் கலவரம்: எகிப்தில் 73 பேர் பலி  -  கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் பப்புவா நியூகினியா கப்பல்  -  ஒபாமாவை எதிர்த்து மிட் ரோம்னி போட்டி  -  கிழக்கு மத்திய ஐரோப்பாவில் கடும் பனிப்பொழிவால் 60பேர் பலி!  -  நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் காலமானார்  -  டி20: ஆஸ்திரேலியா 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது  -  டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியாவுக்கு 7 - வது இடம்  -   படித்துவிட்டீர்களா? “அகல் விளக்கு” புதிய இணைய இதழ்
கொள்ளு ரசம் | தக்காளி ரசம் | பருப்பு ரசம்





தக்காளி ரசம்

தேவையான பொருட்கள்

தக்காளி - 3
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
பூண்டு - 10 பல்
கடுகு - 1/4 தேக்கரண்டி
வரமிளகாய் - 2
கடலைப் பருப்பு - 1/4 தேக்கரண்டி
உடைத்த உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

ரசப் பொடி செய்ய

துவரம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
மல்லி - 1/4 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயத் தூள் - 1/4 தேக்கரண்டி

செய்முறை

1. துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மல்லி, மிளகு, சீரகம், வெந்தயத்தூள் ஆகியவற்றை தனியே நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

2. சிறிது தண்ணீரில் தக்காளியை உப்பு சேர்த்து கையால் கரைத்து தோலினை எடுத்து விடவும்.

3. புளியை ஒரு கோப்பைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

4. இதனுடன் கரைத்த தக்காளியை சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

5. பூண்டை தோல் உரிக்காமல் ஒன்று இரண்டாக தட்டிக் கொள்ளவும்.

6. தனியே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, கிள்ளிய வரமிளகாய், பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.

7. இதனுடன் நசுக்கிய பூண்டை போட்டு லேசாக ஒரு பிரட்டு பிரட்டி, தனி பாத்திரத்தில் வைத்துள்ள புளி, தக்காளி கரைசலில் சேர்க்கவும். பின்னர் இந்த கரைசல் பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்.

8. பிறகு இதனுடன் ரசப்பொடி, கொத்தமல்லித்தழை சேர்த்து வேக விடவும். ரசம் நுரைத்து ஒரு கொதி வந்த உடனே மூடி வைத்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.

ஆக்கம்

ச. சுதாதேவி
சென்னை - 600 050.


இணைய பக்க முகவரி: http://www.samaiyalarai.com/rasam/tomatorasam.html



பயன்படு செய்திகள்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 






கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs