இறால் கிரேவி
தேவையான பொருட்கள் இறால் - 1/2 கிலோ சாம்பார் வெங்காயம் - 200 கிராம் இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி தக்காளி - 1 பூண்டு - 10 பல் பட்டை - 2 (1/2 இஞ்ச் அளவு) கிராம்பு - 5 கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை - 2 கொத்து கொத்தமல்லித்தழை - சிறிதளவு மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி மல்லித் தூள் - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை 1. இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்து, நன்றாக கழுவி வைத்து கொள்ளவும். 2. சாம்பார் வெங்காயத்தில் பாதியை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மீதியை பச்சையாக அரைத்துக் கொள்ளவும். 3. தக்களியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 4. பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தோல் உரித்த பூண்டு போட்டு சிவக்க வதக்கவும். 5. பிறகு இஞ்சி பூண்டு விழுது, அரைத்து வைத்துள்ள வெங்காய விழுது, சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 6. அடுத்து நறுக்கிய தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கியதும், இறாலைப் போட்டு நன்றாகப் பிரட்டவும். 7. இதனுடன் மல்லித்தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக பிரட்டி, சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து நன்றாக வேக விடவும். 8. இறால் வெந்து கிரேவி நன்றாக சுண்டி எண்ணெய் மேலே வரும் போது, மிளகு தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து, அடுப்பிலிருந்து இறக்கவும். குறிப்பு 1. இறாலை கழுவும் போது கால் அல்லது அரை எலுமிச்சம் பழ சாற்றை அதனுடன் சேர்த்து கழுவினால் இறால் வாசனை குறைவாக இருக்கும். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050.
|
|
|
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
பயன்படு செய்திகள் |