மோர் குழம்பு தேவையான பொருட்கள் புளித்த தயிர் - 1 கோப்பை தேங்காய் - 1/4 மூடி சீரகம் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 சிட்டிகை முந்திரி - 4 பச்சை மிளகாய் - 2 தக்காளி - 1 உப்பு - தேவையான அளவு தாளிக்க கடுகு - 1/2 ஸ்பூன் கடலைப்பருப்பு - 1/2 ஸ்பூன் உளுந்து - 1/2 ஸ்பூன் பெருங்காயம் - சிறிது எண்ணெய் - 1 ஸ்பூன் கறிவேப்பிலை - 1 கொத்து செய்முறை 1. புளித்த தயிர், மஞ்சள் தூள், உப்பு, ஆகியவற்றை தண்ணீர் கலக்காமல் கலந்து வைக்கவும். 2. துருவிய தேங்காய், சீரகம், முந்திரி, பச்சை மிளகாய், ஆகியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும். 3. பிறகு தாளிக்கும் பொருட்கள் போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். 4. இதில் ஏற்கனவே அரைத்த கலவையையும், தயிர் கலவையையும் சேர்த்து கொதி வரும் முன் இறக்கி கொத்துமல்லி தழை தூவி பரிமாறவும். குறிப்பு 1. இதில் காய் சேர்க்க வேண்டுமானால் தனியாக காயை வேகவைத்து கடைசியில் சேர்க்க வேண்டும். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ, ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.
|
|
|
|
|
தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2007 சமையல்அறை.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. |