பச்சைப்பயிறு குழம்பு
தேவையான பொருட்கள் பச்சைப்பயிறு - 100 கிராம் சின்ன வெங்காயம் - 10 பூண்டு - 10 பல் தக்காளி - 1 பெரியது மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 1 சீரகம் - 1/2 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி கடுகு - 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி கடலைப் பருப்பு - 1/2 தேக்கரண்டி புளி - கோலி உருண்டை அளவு பெருங்காயம் - 2 சிட்டிகை உப்பு - தேவையான அளவு செய்முறை 1. பச்சைப்பயிறை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளவும். பிறகு தண்ணீரில் நன்றாக அலசி கழுவிக் கொள்ளவும். 2. சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும். 3. குக்கரில் கழுவிய பச்சைப்பயிறு, பூண்டு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், சீரகம், மிளகுத்தூள், சிறிது எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து, இவையனைத்தும் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும். 4. குக்கரில் 4 அல்லது 5 விசில் வரும் வரை வேக விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். 5. பிறகு வெந்த பச்சைப்பயிற்றில் புளியைச் சேர்த்து மத்தைக் கொண்டு நன்றாகக் கடையவும். 6. பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பெருங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு வறுத்து, இதனுடன் கடைந்து வைத்துள்ள பச்சைப்பயிறு மசியலை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். 7. குழம்பு கொஞ்சம் கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும். குறிப்பு 1. பச்சைப்பயிறை ரொம்பவும் வேக வைத்தால் குழைந்து மாவு போல் ஆகிவிடும். இதனால் குழம்பின் சுவை மாறிவிடும். ஆகவே பச்சைப்பயிறை முக்கால் வேக்காடு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி மசித்துக் கொள்ளவும். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050.
|
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
பயன்படு செய்திகள் |