புடலங்காய் கூட்டு
தேவையான பொருட்கள் புடலங்காய் - 1 (சிறியது) கடலைப்பருப்பு - 25 கிராம் (ஒரு கைப்பிடி) பச்சை மிளகாய் - 1 பெரிய வெங்காயம் - 1 கறிவேப்பிலை - 1 கொத்து தேங்காய்துருவல் - 2 தேக்கரண்டி வரமிளகாய் - 1 சீரகம் - 1/4 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1/4 தேக்கரண்டி உடைத்த உளுத்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி எண்ணெய் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை 1. புடலங்காயையும், வெங்காயத்தையும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2. கடலைப்பருப்பை சிறிது நேரம் ஊற வைத்து, நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். 3. தேங்காய் துருவலுடன், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். 4. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு காய்ந்ததும், கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். 5. பிறகு அதில் வரமிளகாய், நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை போட்டு சிவக்க வதக்கவும். 6. வதக்கியதும் நறுக்கிய புடலங்காயையும், வேகவைத்த கடலைப்பருப்பையும் போட்டு லேசாக கிளறி விடவும். 7. அதனுடன் அரைத்த தேங்காய் விழுது, உப்பு ஆகியவை சேர்த்து, ஒரு கொதி வரும் வரை வேக வைத்து, கொஞ்சம் கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். குறிப்பு 1. தேங்காய் விழுது சேர்த்ததும், சிறிது நேரம் மட்டுமே அடுப்பில் இருக்க வேண்டும். 2. மேலும் சுவை சேர்க்க, அடுப்பிலிருந்து இறக்கியதும் ஒரு தேக்கரண்டி கெட்டித் தயிர் சேர்த்துக் கிளறவும். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050.
|
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
பயன்படு செய்திகள் |