கறிவேப்பிலை சட்னி
தேவையான பொருட்கள் கறிவேப்பிலை - 1 கட்டு சின்ன வெங்காயம் - 1 கோப்பை தக்காளி - 1 பச்சை மிளகாய் - 2 கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி உடைத்த உளுந்து - 1/2 தேக்கரண்டி புளி - 1 கொட்டை அளவு தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி பூண்டு - 4 பல்லு இஞ்சி - 1 துண்டு உப்பு - தேவையான அளவு தாளிக்க கடுகு - 1/2 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1/4தேக்கரண்டி உடைத்த உளுந்து - 1/4 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிது எண்ணெய் - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - 1 கொத்து செய்முறை 1. சிறிது எண்ணெயை விட்டு கருவேப்பிலையை நன்றாக வறுத்துக்கொள்ளவும். 2. வாணலியில் சிறிது எண்ணெயைவிட்டு கடலைபருப்பையும் உளுந்தையும் சிவக்க வறுத்துக் கொள்ளவும். 3. பிறகு அதில் வெங்காயத்தைக் கொட்டி சிவக்க வதக்கவும். 4. அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 5. பிறகு அதில் புளியைச் சேர்க்கவும். 6. பின்னர் இறக்கிவைத்து தேங்காய் துருவலைச் சேர்த்து ஆறவைக்கவும். 7. பிறகு அனைத்தையும் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். 8. அடுத்து தாளிக்கும் பொருள்களைக் கொண்டு தாளிக்கவும். குறிப்பு: 1. இறக்கும் போது ஒரு தேக்கரண்டி நெய்விட்டு இறக்கினால் வாசனையாக இருக்கும். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050.
|
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
பயன்படு செய்திகள் |