கோழிக்கறி குழம்பு தேவையான பொருட்கள் கோழிக்கறி - 1/2 கிலோ பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 2 அல்லது 3 பூண்டு - 15 பல் இஞ்சி - சிறிதளவு மஞ்சள்தூள் - சிறிதளவு பெருஞ்சீரகம் - சிறிதளவு மிளகாய்த்தூள் - தேவையான அளவு மல்லித்தூள் - 1 மேஜைக் கரண்டி எண்ணெய் - 1 மேஜைக் கரண்டி பட்டை - சிறிதளவு கிராம்பு - 5 கொத்தமல்லித்தழை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு செய்முறை 1. கோழிக்கறியை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 2. வெங்காயம், தக்காளி ஆகியவற்றை கழுவி வெட்டி வைத்துக் கொள்ளவும். 3. பூண்டை தோல் உரிக்கவும். அதிலிருந்து 5 பல் பூண்டு, இஞ்சி, சிறிதளவு நறுக்கிய வெங்காயம், பெருஞ்சீரகம் ஆகியவற்றை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ளவும். 4. அடுப்பில் ஒரு வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு ஆகியவற்றைப் போட்டு சூடாக்கவும். 5. கிராம்பு வெடிக்கும் போது நறுக்கிய வெங்காயத்தையும் மீதமுள்ள பூண்டையும் போட்டு வதக்கவும். 6. வெங்காயம், பூண்டு வதங்கியதும், அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும். 7. பிறகு தக்காளி சேர்த்து வதக்கி விட்டு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் ஆகியவற்றைப் போட்டு 2 கோப்பை தண்ணீர் சேர்க்கவும். 8. தண்ணீர் லேசாக கொதிக்கும்போது கழுவி வைத்துள்ள கோழிக்கறியை எடுத்துப்போட்டு நன்கு வேகவிடவும். 9. கோழிக்கறி நன்கு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி அதில் சேர்க்கவும். குறிப்பு 1. விருப்பமுள்ளவர்கள் அரை மூடி தேங்காயை சிறிது பெருஞ்சீரகத்துடன் சேர்த்து நன்கு அரைத்து, கோழிக்கறி நன்கு வெந்ததும் கடைசியாகச் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வரும் வரை வேகவிடவும். 2. தேங்காய் சேர்த்த பிறகு அடிபிடிக்கும் ஆகையால் அருகிலேயே இருந்து அடிக்கடி கிளறி விடவும் 3. மல்லித்தூளுக்குப் பதிலாக கோழிக்கறி கரம் மசாலாவும் சேர்க்கலாம். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050.
|
ஆன்மீகம் |
தினசரி தியானம் |
பயன்படு செய்திகள் |